×

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை

புழல்:  செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மகன் சுரேஷ் (16). இவர் சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவர் சுரேஷ் எந்நேரமும் செல்போனில் பிரீ பையர் கேம் விளையாடி வந்ததால் தாய் மீனா கண்டித்துள்ளார். இதனால், கடந்த நான்கு நாட்களாக சுரேஷ் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவன் சுரேஷ் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி வரை வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், எதிரே இருந்த அவர்களது பழைய வீட்டின் உள் தாழ்ப்பாள் வெகுநேரமாக போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அக்கம் பக்கத்தினரின்,  உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மாவின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.   மாணவன் சுரேஷ் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்….

The post செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lakshmipuram Ganges ,Chennai Pujal ,
× RELATED சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!!