×

பேரறிவாளன் வழக்குகள் அடுத்த மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: பேரறிவாளன் தொடர்பான வழக்குகளை மார்ச் 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று உறுதியளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை நான் வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் சிபிஐ தாக்கல் செய்யவில்லை. எனவே, எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்,’ என கூறியுள்ளார். அதேபோல், தீவிரவாத வழக்கில் இருந்து நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? என மும்பை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கையும் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் பேரறிவாளன் தொடர்பான வழக்குகள் பட்டியலிடப்பட்டு கடந்த முறை நீக்கப்பட்டு விட்டது. அதனால், வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். அதனை ஏற்றுகொண்ட நீதிபதி மார்ச் 9ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்….

The post பேரறிவாளன் வழக்குகள் அடுத்த மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Perarivalan ,Former ,Rajiv… ,Perariwalan ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு