×

குரங்கு தொல்லையில் இருந்து எங்கள காப்பாத்துங்க : வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கெஞ்சல்

நெல்லை: நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரில் ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்களிடம் குரங்கு தொல்லையில் இருந்து தங்களை காப்பாற்றக்கோரி வாக்காளர்கள் கெஞ்சி கேட்டு வருகின்றனர். நெல்லை மாநகராட்சி தேர்தல் வரும் 19ம்தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், நெல்லை மாநகராட்சியில் ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை முன் வைத்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பிரச்னை, விரிவாக்க பகுதிகளில் குடிநீர் பிரச்னையை வாக்காளர்கள் கோரிக்கையாக முன் வைத்து வருகின்றனர்.நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் கோடீஸ்வரன் நகர் தெருக்கள் வருகின்றன. இங்கு ஓட்டு கேட்டு செல்லும் அரசியல் கட்சி வேட்பாளர்களிடம் அப்பகுதி மக்கள் வித்தியாசமான கோரிக்கையை முன் வைக்கின்றனர். கோடீஸ்வரன் நகரில் சில நாட்களாகவே குரங்கு குட்டிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்வதும், பூங்காங்களில் அட்டகாசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையில் ஏற்கனவே புகார் அளித்தனர். வனத்துறை வைத்த கூண்டில் ஒருவாரத்திற்கு பின்னர் ஒரு குரங்கு குட்டி மட்டுமே சிக்கியது. இருப்பினும் மற்ற குரங்குகள் கோடீஸ்வரன் நகர் குடியிருப்பு வாசிகளை இன்றளவும் பரீட்சை பார்த்து வருகின்றன. எனவே ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் ‘எப்படியாவது எங்களை குரங்கு தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள்’ என வாக்காளர்கள் கெஞ்சி கேட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிற உறுதிமொழியோடு நகர்கின்றனர். நெல்லை மாநகராட்சி டவுன் 51வது வார்டு என்றாலே ஒரு காலத்தில் நாய்தொல்லையாக இருந்தது. இப்போது கோடீஸ்வரன் நகர் 22வது வார்டில் குரங்கு தொல்லை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது….

The post குரங்கு தொல்லையில் இருந்து எங்கள காப்பாத்துங்க : வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கெஞ்சல் appeared first on Dinakaran.

Tags : Paddy Town Bountieswaran ,Bengal ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...