×

100 அடி உயர செல்போன் டவர் உச்சியில் : நிர்வாணமாக ஏறி நின்று மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு

வலங்கைமான்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தில்லையம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார்(50). கட்டுமான தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். செல்வகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த உத்தாணியில் உள்ள 100 அடி உயர தனியார் செல்போன் டவர் மீது நேற்று பிற்பகல் போதையில் நிர்வாணத்துடன் செல்வகுமார் ஏறினார். வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விஜயா, பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று செல்வகுமாரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அதை காது கொடுத்து கேட்காமல் செல்வகுமார் நின்றார். இதனால் செல்போன் டவர் மீது தீயணைப்பு வீரர்கள் ஏறினர். இதை பார்த்து செல்வக்குமார் கிடுகிடுவென செல்போன் டவரின் உச்சிக்கு ஏறி சென்றார். இதனால் தீயணைப்பு வீரர்கள் செல்போன் டவர் மீது ஏறி செல்லாமல் கீழே இறங்கினர். இதையடுத்து செல்வகுமாரின் 12 வயது மகனை சம்பவ இடத்துக்கு வரவழைத்து தந்தையுடன் ஒலிபெருக்கியில் பேச செய்தனர்.  அப்பா கீழே இறங்கி வாருங்கள் என்று செல்வகுமாரிடம் அவரது மகன் ஒலிபெருக்கியில் பேசினான். இதையடுத்து 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு செல்வகுமார் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து செல்வகுமாரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், இனிமேல் அவரை தனியாக விட வேண்டாம் என்று அவரது மனைவி, உறவினர்களிடம் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்….

The post 100 அடி உயர செல்போன் டவர் உச்சியில் : நிர்வாணமாக ஏறி நின்று மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Valankaiman ,Selvakimar ,Dillaiyampur ,Kumpakonam ,Thanjai district ,Cell Phone ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூரில்...