சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). அண்ணா சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடமாக மேற்கண்ட முகவரியில் ஒப்பந்த அடிப்படையில் வசித்து வருகிறார். இதற்காக, வீட்டின் உரிமையாளர் ஆறுமுகத்திடம் (44), ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம், சதீஷ்குமாரை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார், நான் கொடுத்த ரூ.1 லட்சத்தில் ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்தால் தான், வேறு வீடு பார்த்து முன்பணம் தர முடியும் எனக் கூறியுள்ளார்.ஆனால், அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், வீட்டு உரிமையாளர் ஆறுமுகம், சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் வெட்டினார். இதில் சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். …
The post வீட்டை காலி செய்ய மறுத்தவருக்கு வெட்டு: வீட்டு உரிமையாளர் கைது appeared first on Dinakaran.