பெரம்பூர்: வியாசர்பாடி வியாசர் நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆட்கள் வந்து செல்வதாக வந்த புகாரின்பேரில், போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு பெண், முல்லை நகர் மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது. அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அங்கு வாடிக்கையாளராக வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனை பிடித்து, அவரது எதிர்காலம் கருதி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (62) என்ற நபரை பிடித்து விசாரித்தபோது, இவர் வடமாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்….
The post வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த முதியவர் கைது: 3 பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.