×

அனாதை, பைத்தியக்காரன் என கூறியதால் ஆத்திரம் தாயை குத்தி கொன்ற மகன்: சடலத்தை வீட்டிற்குள் புதைக்க பள்ளம் தோண்டியது அம்பலம்

சென்னை: பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன்(60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா(54). மகன்கள் ராமதாஸ்(30), ஜெயபால்(24). இவர்களில் ராமதாசுக்கு திருமணமாகி பக்கத்து தெருவில் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ஜெயபாலுக்கு திருமணமாகவில்லை. இவர், எப்போதும் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதை தாய் மல்லிகா கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தாய், மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயபால் வீட்டை விட்டு வெளியே சென்று மது அருந்திவிட்டு, போதையில் வீட்டுக்கு வந்து, தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மல்லிகா ஜெயபாலை பார்த்து, `நீ ஒரு அனாதை, பைத்தியக்காரன்’ என்று திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மல்லிகாவை சரமாரியாக குத்தியுள்ளார்.இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், இரவு முழுவதும் சடலத்துடன் படுத்து கிடந்த அவர், கொலையை மூடி மறைக்க வீட்டிற்குள்ளேயே தாய் உடலை புதைக்க முடிவு செய்து பள்ளம் தோண்டினார். ஆனால் அவர் அந்த பள்ளத்தில் தன் தாயாரின் உடலை புதைக்காமல் பெற்ற தாயை மதுபோதையில் கொலை செய்து விட்டோமே என அழுது புலம்பி வந்துள்ளார். இதற்கிடையில், நேற்று முன்தினம் மூத்த மகனான ராமதாஸ் வீட்டிற்கு வந்துபார்த்தபோது தாய் கொலை செய்ததை பார்த்து அழுது புலம்பினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராமதாஸ் தன் சகோதரர் ஜெயபாலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கை கால்களை கட்டி ஒரு மூலையில் அமர வைத்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அவர் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி சம்பவ இடத்திற்கு வந்து மல்லிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஜெயபாலை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். …

The post அனாதை, பைத்தியக்காரன் என கூறியதால் ஆத்திரம் தாயை குத்தி கொன்ற மகன்: சடலத்தை வீட்டிற்குள் புதைக்க பள்ளம் தோண்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anandan ,Poonthamalli ,Mentor ,mallica ,Ramadas ,Jaibal ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது