×

ஏர் ஏசியா விமானத்தில் பாம்பு : பயணிகள் பீதி; விமானி உஷார்

கோலாலம்பூர்: ஏர் ஏசியா விமானத்தின் லக்கேஜ் பகுதிக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதால் பயணிகள் பீதியடைந்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தவாவ் நகருக்கு ஏர் ஏசியா விமானம் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த விமானத்தின் பொருட்கள் வைக்கும் லக்கேஜ் இடத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்த பயணி ஹனா மொஹ்சின் கான், வீடியோ எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக லக்கேஜ் வைக்கும் இடத்தில் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த மற்ற பயணிகள் பீதியடைந்தனர். ஒருவழியாக ஏர் ஏசியாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கேப்டன் லியோங் டியென் லிங்குக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அந்த பாம்பு பயணிகள் இருக்கும் இடத்திற்கு கீழே இறங்காதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஏர் ஏசியாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கேப்டன் லியோங் டியென் லிங் வெளியிட்ட அறிக்கையில், ‘மிகவும் அரிதான சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கேப்டன் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்; பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இருந்தும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 13,000 பேர் பார்த்துள்ளனர். அதில் விமான பயணி ஒருவர் பதிவிட்ட கருத்தில், ‘ஐயோ! விமானத்தில் பாம்பு…? உடனே விமானத்தை தரையிறக்குங்கள்… இல்லாவிட்டால் இங்கிருந்து குதிப்பேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு மற்றொருவர், ‘குதித்துதான் பாரேன்’ என்று பதிலடி கருத்து தெரிவித்துள்ளார்….

The post ஏர் ஏசியா விமானத்தில் பாம்பு : பயணிகள் பீதி; விமானி உஷார் appeared first on Dinakaran.

Tags : KUALA LUMPUR ,Malaysia ,Asia ,Ushar ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...