துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் எழில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முஜிப் (42), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (38,பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் சுமித்திரா (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சுசிலா வழக்கம்போல் வேலைக்கு சென்றார். சுமித்திரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மது போதையில் வீட்டிற்கு வந்த முஜிப், தனியாக இருந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி அழுதவாறு வீட்டில் இருந்தார். வேலைக்கு சென்ற சுசிலா மாலை வீடு திரும்பியதும், நடந்ததை அழுதவாறு, அவரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுசிலா தனது கணவரை அடித்து, உதைத்தார். இதையடுத்து, கண்ணகி நகர் போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில், முஜிப்பை பிடித்து விசாரித்தபோது, போதையில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….
The post மகள் பாலியல் பலாத்காரம் போக்சோவில் தந்தை கைது appeared first on Dinakaran.