×

கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்த விவகாரம் 6 ஆண்டாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு திருமணம் செய்ய முயன்றதால் விபரீதம்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் (40) என்பவர் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த 6 ஆண்டுகளாக இளைச்சி (35) என்பவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, சந்தீப் ஜெயின் மற்றும் இளைச்சி ஆகியோர் உடலில் தீ வைத்து கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில், இளைச்சி சம்பவ இடத்திலேயே இறந்தார். சந்தீப் ஜெயின் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார். தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார், சந்தீப் ஜெயினை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், சந்தீப் ஜெயினுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும், அதேபோல் இளைச்சியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்ததும், பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இதனிடையே, இளைச்சிக்கு ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வரும் 17ம் தேதி நடக்க இருந்தது. இதுகுறித்து தனது கள்ளக்காதலன் சந்தீப் ஜெயினிடம் இளைச்சி நேற்று முன்தினம் கூறியுள்ளார். அதற்கு அவர், கடந்த 6 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வதா என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த இளைச்சி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தீப் ஜெயினும், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்….

The post கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்த விவகாரம் 6 ஆண்டாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு திருமணம் செய்ய முயன்றதால் விபரீதம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sandeep Jain ,Choolai Highway ,Periyamedu ,Chennai.… ,Kallakadal ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வால் டாக்ஸ்...