×

பாஜவின் செய்தி தொடர்பாளர் எடப்பாடி பழனிசாமி: திருமாவளவன் பேட்டி

சென்னை: சென்னையில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று தமிழகத்தில் ஏராளமான பல்கலைக்கழகங்களை உருவாக்கி இருக்கிறோம். ஆனால், உத்திரபிரதேசத்தில் புராணங்களுக்கான பல்கலைக்கழகம் அமைப்போம் என்று சொல்வதில் இருந்து இந்த மக்களை எந்த அளவிற்கு ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. கட்சியின் ஆதாயத்திற்காக மதம் சார்ந்த விஷயங்களை பாஜக பயன்படுத்துகிறது. இந்துக்கள் பாஜகவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி பாஜகவின் செய்தி தொடர்பாளராகவே மாறி பேசி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் செயல்பாடு. அதை அதிமுகவின் தலைவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பேசுகிறார். மேற்குவங்க ஆளுநர் அதிகார வரம்பு மீறும் வகையில் நடந்துள்ளார். அதை நியாயப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறாரா அல்லது பாஜவின் செய்தி தொடர்பாளராக பணியாற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது….

The post பாஜவின் செய்தி தொடர்பாளர் எடப்பாடி பழனிசாமி: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Edappadi Palaniswami ,Thirumavalavan ,Chennai ,VC ,president ,Tamil Nadu ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...