×

141வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் பிரசாரம்

சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், தினசரி வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று சிஐடி நகரில் உள்ள தென் மேற்கு போக் சாலை, மதுரை வீரன் கோயில் தெரு, மூசா தெரு மற்றும் மூப்பாரப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ‘‘என்னை வெற்றி பெற செய்தால், சிஐடி நகர் சமூக நலக்கூடத்தை நவீன வசதிகளுடன் சீரமைத்து தருவேன், சாலையோர நடைபயிற்சி பூங்காக்கள் அமைப்பேன், மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவேன். மக்களுடன் மாமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தை தொடங்கி, மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பேன், என வாக்குறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின்போது, கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை, வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம், எல்.குமரன், ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் திமுக முன்னோடிகள், நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்….

The post 141வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Kazhagam ,Raja Andabhagan Prasaram ,Chennai ,Raja Anandhagan ,Progressive Alliance ,141st Ward ,Chennai Corporation ,141st Ward Area ,Raja Andabhagan ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்