×

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்: கனிமொழி எம்பி பேச்சு

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திமுக,  அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சையினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன்பேரில், நேற்று மாலை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53வது வார்டுக்கு உட்பட்ட மூலகொத்தளம் சிபி சாலையில், திமுக வேட்பாளர் வேளாங்கண்ணி ஆதரித்து, மாநில மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில், இந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி ஏற்கனவே மாநகராட்சி உறுப்பினராக பணிபுரிந்தவர்.  மீண்டும் அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும். மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னை அடிப்படை பிரச்னைகளை நமது வேட்பாளர் செய்து கொடுப்பார். காசிமேடு பகுதியில் 150 கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது இவ்வாறு அவர் பேசினார்….

The post குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்: கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : MP Speech ,Chennai ,municipal election ,Dasagam ,Adhikhagam ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்