×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 8,229 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.26 மேல் அதிகரித்துள்ளது 5.09 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2,296 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,383  பேர் ஆண்கள், 913 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 36 ஆயிரத்து 262ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 41ஆயிரத்து 699ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 333 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளார்.  4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்,  7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து  915ஆக அதிகரித்துள்ளது. இன்று 8,229 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 56ஆயிரத்து 648ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 8,229 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,India ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...