×

பிரபல நகை கடன் நிறுவனத்தில் ரூ29 லட்சம் நூதன மோசடி: முன்னாள் மேலாளர் மீது போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: சென்னையில் உள்ள பிரபல நகைக் கடன் நிறுவனத்தில், ரூ29 லட்சத்தை மோசடி செய்ததாக முன்னாள் மேலாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் பிரபல நகைக்கடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக பணிபுரியும் நாராயணமூர்த்தி (33), நேற்று காசிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எங்களது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த பொன்னுசாமி மற்றும் 8 பேர் சேர்ந்து, எங்களது நிறுவனத்தில் ₹29 லட்சத்தை முறைகேடு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தின் லாக்கரில் இருந்து 101 சவரன் தங்க நகையை, போலி ஆவணங்கள் மூலம் மறு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் பொன்னுசாமி உள்பட 9 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பிரபல நகை கடன் நிறுவனத்தில் ரூ29 லட்சம் நூதன மோசடி: முன்னாள் மேலாளர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Kandadarpet ,Chennai ,Nutana ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...