×

ஒரப்பம், பேரிகையில் எருதாட்டம்-400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி : ஒரப்பம், பேரிகையில் எருதாட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் சுமார் 400 காளைகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரப்பம் கிராமத்தில், எருதாட்டம் விழா நேற்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் பந்தய இலக்கை விரைவாக கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எருதுவிடும் விழாவை கிருஷ்ணகிரி, பர்கூர், கந்திகுப்பம், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ேடார் கண்டு ரசித்தனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே போல், பேரிகை அருகே வானமங்கலம் கிராமத்தில், நேற்று காலை 9 மணியளவில் எருதாட்டம் நடந்தது. இதில் பேரிகை, காட்டிநாயக்கனதொட்டி, ஓசூர், பாகலூர், மாஸ்தி, அத்திமுகம், சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். எருதாட்டத்தையொட்டி பேரிகை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post ஒரப்பம், பேரிகையில் எருதாட்டம்-400 காளைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Orapam ,Parikai ,-400 bulls ,Krishnagiri ,Barikai ,Barkur, Krishnagiri District ,Orappam ,Bull Run-400 bulls ,Dinakaran ,
× RELATED மது பாட்டில் கடத்தி வந்த கர்நாடக மாநில வாலிபர் கைது