×

ஹீரோவுடன் நெருக்கமான காட்சி கணவர் ஒப்புதல் தந்தாரா? தீபிகா ஆவேசம்

மும்பை: ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவர் ரன்வீர் சிங் ஒப்புதல் தந்தாரா என்ற மீடியாவின் கேள்வியால் கோபம் அடைந்தார் தீபிகா படுகோன். தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ள இந்தி படம் கெஹ்ராய்யான். இந்த படம் நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. இதில் சித்தாந்துடன் நெருக்கமான காட்சிகளில் படு கவர்ச்சியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இதுவரை அவர் எந்த படத்தில் இப்படி நடித்ததில்லை. இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற காட்சியில் நடிக்க கணவர் ரன்வீர் சிங் ஒப்புதல் தந்தாரா என நிருபர் ஒருவர் கேட்டதும், ‘இது அசிங்கம்’ என ஆவேசமாக கூறினார் தீபிகா. பின்னர், ‘இதற்கு பதில் சொல்வதே முட்டாள்தனம் என நினைக்கிறேன். இதுபோன்ற சமயத்தில் வெளியாகும் கமென்ட்களையும் நான் பார்ப்பதில்லை. இது எல்லாமே சுத்தமாக எனக்கு பிடிக்காது’  என தீபிகா கோபமாக சொன்னார். இந்த படம்பற்றி ரன்வீர் சிங் என்ன சொன்னார் என்ற மற்றொரு கேள்விக்கு, ‘எனது நடிப்பால் அவர் பெருமைப்படுவதாக கூறினார்’ என்றார்….

The post ஹீரோவுடன் நெருக்கமான காட்சி கணவர் ஒப்புதல் தந்தாரா? தீபிகா ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Deepika ,Mumbai ,Ranveer Singh ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...