×

செல்பி மோகத்தில் 1,500 அடி பள்ளத்தில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வட்டக்கானலில் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியான செங்குத்து பாறை (ரெட் ஹில்) பகுதி உள்ளது. இப்பகுதிக்கு மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராம்குமார் (32) மற்றும் இவரது நண்பர்கள் கடந்த பிப். 2ம் தேதி மாலை சென்றுள்ளனர். அப்போது செங்குத்து பாறையின் நுனி அருகே சென்ற ராம்குமார் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து மாயமானார். கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினர். இந்நிலையில் சுமார் 1,500 அடி பள்ளத்தில் ராம்குமாரின் உடல் சிதைந்த நிலையில் பாறைகள் இடையே கிடப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது உடலை சாக்கு பையில் கட்டி, நேற்று மேலே கொண்டு வந்தனர். …

The post செல்பி மோகத்தில் 1,500 அடி பள்ளத்தில் விழுந்து பலியான வாலிபர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Red Hill ,Vattakanal ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...