×

மயிலாடுதுறை நகர வங்கி பகுதியில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகள் அகற்றம்: தினகரன் செய்தி எதிரொலி

மயிலாடுதுறை: நகர வங்கி பகுதி சந்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு வியலால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதை சரிசெய்யவேண்டும் என்று கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரில் குப்பைமேலாண்மை பெரும்பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 3 இடங்களில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காதகுப்பை என தரம்பிரித்து அவற்றை இயற்கை உரமாக்கி வயல்களுக்கு அளித்துவருகின்றனர். மயிலாடுதுறை ஆனந்த தாண்டவபுரம் செல்லும் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்களில் பல்லாயிரம் டன் குப்பை கொட்டப்பட்ட மலைபோல் தேங்கி அவற்றை கடந்த 3 ஆண்டுகளாக பிரித்து அரைத்து குப்பையை உரமாக்கி பொதுமக்களுக்கு இலவசமாக அளித்துவருகின்றனர். நகரில்பல இடங்களில் தெருக்கள் கூடும் இடத்தில் குப்பைகளை கொட்டிவைப்பதும் அதில் அழுகும் பொருளை வைத்து துர்நாற்றம் வீசுதும் வாடிக்கையாக உள்ளது. திருஇந்தளூர் பகுதி கேபிஎன் நகருக்குச் செல்லும் குறுக்குவழியில் 300 மீட்டருக்கு புதிதாக போடப்பட்டுள்ள சாலையை அடைத்து குப்பைகளை வீசியதால் அப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்லமுடியாததால அப்பகுதி மக்கள் அந்த சாலையையே அடைத்துவிட்டனர்.அதே போன்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை ஒட்டிச்செல்லும் சிறிய சாலை ஒன்று 1 கி.மீ தூரம் சென்று காவிரிக்கரையை அடையும் ஆனால் பெரிய கடைவீதியில் அந்த சாலை அடைக்கப்பட்ட கடைகளாக மாறிவிட்டது. நகரகூட்டுறவு வங்கிகிளையின் மேல்புறம் வழியாகச் செல்லும் சந்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். மூடை மூடையாக கொட்டப்படும் குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த இடத்தில் மருத்துவக்கழிகளும் கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது. உடனே மயிலாதுறை நகராட்சி இந்தப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி அப்பகுதியில் மேலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி கடந்த 3ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளிவந்திருந்தது, இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் உடனே அந்தக்குப்பைகளை அகற்றி அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர்தெளித்து சுத்தப்படுத்தினர், நடவடிக்கைஎ டுத்த நகராட்சிநிர்வாகத்திற்கும் செய்திவெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்….

The post மயிலாடுதுறை நகர வங்கி பகுதியில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகள் அகற்றம்: தினகரன் செய்தி எதிரொலி appeared first on Dinakaran.

Tags : Mayeladududuram City Bank Area ,Dinakaran ,Mayeladuthura ,Mayiladudura City Bank ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...