×

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கொத்தனாரை கொன்ற உறவினர்

பெரம்பூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பாபு (40), கொத்தனார்.  இவருக்கு மெர்சி (38) என்ற மனைவியும்,  4 மகள்களும் உள்ளனர்.  மெர்சியின் தம்பி மகள் ஸ்வேதாவிற்கு வரும் 11ம் தேதி  திருமணம் நடைபெற உள்ளது.  இதற்காக புளியந்தோப்பில் உள்ள ராஜேந்திரபாபு வீட்டில் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், உறவினர்கள் பங்கேற்றனர்.அப்போது, மது போதையில் இருந்த ராஜேந்திர பாபு, நிகழ்ச்சிக்கு வந்திருந்த மெர்சியின் அக்கா மருமகன் சதீஷிடம் (30) சென்று, தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சதீஷ், ராஜேந்திரபாபுவை  கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்த கல்லை எடுத்து அவர் மீது போட்டுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திர பாபு கழுத்தில் குத்தியுள்ளார்.  உறவினர்கள் அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், இறந்தவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, போதையில் கீழே விழுந்துவிட்டார், என முதலில் கூறி உள்ளனர். தீவிர விசாரணை யில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டது  தெரியவந்தது. இதையடுத்து, வியாசர்பாடியில்  பதுங்கியிருந்த சதீஷை நேற்று கைது  செய்து, கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்….

The post மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கொத்தனாரை கொன்ற உறவினர் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Rajendra Babu ,2nd Cross Street of Pleyanthopp Ampedkar Nagar, Kotanan ,Mercy ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு