×

மதுராந்தகம் 17வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தருவேன்: மலர்விழிகுமார் வாக்குறுதி

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்’ என உறுதியளித்தார்.மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி தேரடி தெரு, மருத்துவமனை சாலை உள்பட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர்.அப்போது, வேட்பாளர் மலர்விழி குமார், வாக்காளர்களிடம் பேசுகையில், ‘சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவேன். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்வேன். மருத்துவ சிகிச்சை முகாம், கால்நடை மருத்துவ முகாம், மக்கள் குறைதீர் முகாம் உள்பட அரசின் முகாம்களுக்கு ஏற்பாடு செய்வேன். மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து, அதற்கு தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் என கூறினார். உடன், மதுராந்தகம் திமுக நகர செயலாளரும் 2வது வார்டு திமுக வேட்பாளர் கே.குமார், திமுக நிர்வாகிகள் ஜெய்சங்கர், சாரதி, ராஜேந்திரன், கணேசன், பாஸ்கரன், கார்த்திகேயன், சூரியபிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, மோகன்குமார், எல்லப்பன், பார்த்தசாரதி உள்பட பலர் இருந்தனர்….

The post மதுராந்தகம் 17வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தருவேன்: மலர்விழிகுமார் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Malarvizhikumar ,Malarvizhi Kumar ,DMK ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...