×

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பொதுப்பிரிவு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது

நெல்லை : நடப்பு  ஆண்டில் மருத்துவக் கல்வி பயில பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவ,  மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. நெல்லையில்  240 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.தமிழகத்தில்  நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்., படிப்பில்  சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.  சிறப்பு பிரிவினர் மற்றும்  அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு  அவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் கடந்த சனிக்கிழமை  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சேர்க்கை பணி நடந்தது.நெல்லை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள 16 இடங்களையும் மாணவர்கள்  தேர்ந்தெடுத்தனர். சிறப்பு ஒதுக்கீட்டில் 5 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  இதேபோல் மத்திய  இடஒதுக்கீட்டில் உள்ள 37 இடங்களில் இதுவரை 8 பேர்  சேர்ந்துள்ளனர்.இதைத்  தொடர்ந்து பொதுப்பிரிவில் மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த  2ம்தேதி முதல் 5ம் தேதி வரை நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 9  ஆயிரத்து 723 மாணவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி  நேற்று தொடங்கியது. அவர்கள் வசிக்கும் பகுதியின் அருகே உள்ள  மருத்துவக் கல்லூரிகளில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் பொது இடஒதுக்கீட்டில் 240 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில்  மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் டாக்டர்  சாந்தாராம் மற்றும் மருத்துவ குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.குறிப்பிட்ட  நேர இடைவெளியில் 4 பிரிவாக மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாணவர்களுடன்  அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகள்  கடைப்பிடிக்கப்பட்டன. 3 தனித்தனி அறைகளில் மாணவர்கள் பிரித்து வைக்கப்பட்டு  சரிபார்ப்பு பணி நடந்தது. இன்றும்  சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. அதன்பிறகே இவர்களுக்கு  கலந்தாய்வில் இடஒதுக்கீடு குறித்த விவரங்கள் வரும் 15ம்தேதி இணையதளத்தில்  வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து 16ம் தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை  பெற்று 17ம்தேதி முதல் 23ம்தேதி மாலை 3 மணிக்குள் கல்லூரிகளில் சேர  அனுமதிக்கப்படுவர் என மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன….

The post நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பொதுப்பிரிவு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Paddy Government Medical College ,Paddy ,Nedelly Government Medical College ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...