×

முதல் முறையாக நியமனம் ஜேஎன்யு பல்கலை.க்கு பெண் துணைவேந்தர்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) துணை வேந்தராக எம். ஜெகதீஷ் குமார் இருந்து வந்தார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்தது. எனினும் தொடர்ந்து அவர் துணை வேந்தர் பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராக ஜெகதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட்டை ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் நேற்று நியமித்துள்ளது. அரசின் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு பெண் துணை வேந்தர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ, மகாராஷ்டிராவில் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை பேராசிரியாக இருந்து வருகின்றார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான் எம்பில் மற்றும் பிஎச்டி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post முதல் முறையாக நியமனம் ஜேஎன்யு பல்கலை.க்கு பெண் துணைவேந்தர் appeared first on Dinakaran.

Tags : JNU University ,New Delhi ,M. Jagadish ,Kumar ,Dinakaraan ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...