×

காதலைப் பற்றி மனம் திறந்து பேசிய ரகுல் ப்ரீத்

தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங், காதலைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘என்னைப் பொறுத்தவரையில், ஒரு உறவின் ஒப்பந்தத்தை முறிப்பது பொய் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேச முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை. காதலுக்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை பெரிதும் நம்புகிறேன். காரணம், அந்த உறவில் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும், பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமும் இருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம்விட்டுப் பேசலாம்.

நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள். தவறு செய்வது இயல்பு. ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பது மிகப்பெரிய பிரச்னை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாகப் பேசி ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் நேசிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்காமல், உங்களுக்குப் பிடித்ததை அவர்கள் மீது திணித்து, அதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். அவர்களை வளரவிடாமல் தடுக்கின்றனர். உங்களை தொடர்ந்து வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்’ என்று, படபடவென்று பேசியுள்ளார்.

The post காதலைப் பற்றி மனம் திறந்து பேசிய ரகுல் ப்ரீத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rahul Preet ,Rakul Preet Singh ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...