×

மொபட் மீது ரயில் மோதி உடல் சிதறி பெண் சாவு

சென்னை: திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி திவ்யா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திவ்யா திருவள்ளூரில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். புட்லூர் ரயில்வே கேட் வந்தபோது, ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டு இருந்தது. ஆனால், அதை மீறி திவ்யா தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த விரைவு ரயில், மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் திவ்யா தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில், எதிர் திசையில் மின்னல் வேகத்தில் வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் திவ்யா விழுந்ததில், ரயிலில் சிக்கி உடல் சிதறி பலியானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நீண்ட நேரம் போராடி, திவ்யாவின் உடல் பாகங்களை கைப்பற்றிதிருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….

The post மொபட் மீது ரயில் மோதி உடல் சிதறி பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajesh ,Putlur ,Thiruvallur ,Chau ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...