×

ஓய்வூதியர் சங்க மாநாடு

சிவகங்கை, ஜூலை 31: சிவகங்கையில் தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை 5வது மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் உதயசங்கர் கொடியேற்றினார். லோகநாதன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். கிளை செயலாளர் பாண்டி, பொருளாளர் சிவக்குமார் அறிக்கை சமர்ப்பித்தனர். துணைத் தலைவர் விஸ்வநாதன் அரசு ஊழியர் சங்க முன்னாள் துணை தலைவர் மெய்யப்பன், மாவட்ட செயலாளர் செல்லமுத்து, தமிழ் நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியர் நலச் சங்க மாவட்ட தலைவர் போஸ் பேசினர். மாவட்டத் தலைவர் வடிவேலு நிறைவுரையாற்றினார். தமிழ் நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஓய்வூதியர் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Tags : Pensioners' Association Conference ,Sivaganga ,Tamil ,Nadu ,Government All-Department Pensioners' Association District ,Branch ,Branch President ,Krishnakumar ,District Vice President ,Udayashankar ,Loganathan ,Ramasubramanian… ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா