×

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயரும் கொரோனா: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,056 பேர் பலி

ஜெனீவா :  உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39.12 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 391,270,653 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 75,342,913 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 310,184,637 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,743,103 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 281,469 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,619 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட இன்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 125,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,056 பேர் மரணமடைந்துள்ளனர்.பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 219,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,068 பேர் பிரேசிலில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். 15,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்….

The post உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயரும் கொரோனா: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,056 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : India ,Geneva ,Wuhan, China ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...