×

புதுக்கோட்டையில் பொதுமக்கள் குறைதீர்நாள் முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 22: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 526 கோரிக்கை மனுக்களை மக்கள் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வழங்கினர். புதுக்கோட்டை மாவ ட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 526 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவ ட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post புதுக்கோட்டையில் பொதுமக்கள் குறைதீர்நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Grievance Redressal Camp ,Pudukkottai ,Public Grievance Redressal Meeting ,Pudukkottai Collectorate ,Pudukkottai District Collectorate ,District ,Aruna ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா