×

தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? அறநிலையத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கான மின் இணைப்பை துண்டிக்கஉயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கோயில் செயல் அதிகாரிகள் அமல்படுத்தாதது  கண்டனத்திற்குரியது. கோயில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.கடமையைச் செய்வதற்கு தான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருக்க அல்ல. செயல்படாத இவர்களின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது. கோயில் நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர் கண்காணிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை அரசு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறநிலைய துறை ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….

The post தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? அறநிலையத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ICourt ,Chennai ,Trishulanathar ,Chennai Trisulam ,
× RELATED தமிழகம் முழுவதும் கல்வி...