விருதுநகர், ஜூலை 18: பணி பாதுகாப்பு கோரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பிலான ஆர்ப்பாட்டம் முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.
திருத்தங்கல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்களை தலைமையாசிரியரிடம் அழைத்து செல்ல முயன்ற முதுகலை ஆசிரியர் சண்முகசுந்தரத்தை போதை மாணவர்கள் மதுபாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2வது முறையாக ஆசிரியர் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபள்ளியில் போலீசாரை நியமித்து பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். உடனடியாக ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
The post பணி பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
