×

ஒரு மணிநேரம் நீடித்த மழை

தர்மபுரி, ஜூலை 17: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் அனல் காற்று வீசியது. மாலை நேரங்களில் கருமேகம் வானில் திரண்டு வந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை ஒருமணி நேரம் நீடித்தது. ஒரு மணிநேரம் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தர்மபுரி நான்கு ரோடு, நேதாஜி பைபாஸ் ரோடு, தர்மபுரி-சேலம் மெயின்ரோடு, திருப்பத்தூர் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடி தூக்கிய நிலையில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலையில் ஓடியது. மாலையில், பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழையாக பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post ஒரு மணிநேரம் நீடித்த மழை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா