×

ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் ஆதார் விவரத்தை பிப்.28க்குள் இணைக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வரும் 28ம் தேதிக்குள் தவறாமல் இணைத்து நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டி தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திற்கு ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வரும் 28ம் தேதிக்குள் தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திப்படுகிறார்கள்.இதுகுறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் ஆதார் விவரத்தை பிப்.28க்குள் இணைக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNPSC ,Chennai ,DNBSC ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...