- ஆவடி காவல் ஆணையரகம்
- ஆவடி
- சென்னை
- ஆவதி காவல் ஆணையர்
- ஆவடி நகராட்சிகள்
- திருநென்னாவூர்
- பூந்தமல்லி
- திருவேக்காடு
- மாங்காடு நகராட்சிகள்
- திருமசிசை
- நாரவாரிக்குப்பம்
ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சென்னை, ஆவடி மாநகராட்சிகள், திருநின்றவூர், பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகள், திருமழிசை, நாரவாரிக்குப்பம், மீஞ்சூர் பேரூராட்சிகள் உள்ளன. இங்கு வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கவும் சுமூகமாக தேர்தல் நடைபெறவேண்டியும் உதவி ஆணையாளர் கந்தகுமார் தலைமையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆவடி காவல் ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆணையரகத்தின் கீழ், வேட்பு மனுத்தாக்கல் செய்யும் 10 மைங்களில் 8 காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில், 500 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இங்குள்ள 275 மையங்களில் உள்ள 1437 வாக்குச் சாவடிகளில் 71 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதோடு மட்டுமலாமல் விடுதிகள், திருமண மண்டபம் ஆகியவற்றில் வெளியாட்கள் தங்கியுள்ளார்களா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஓவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரவுடிகள் பட்டியலில் உள்ள நபர்கள் அதிக அளவில் பிரச்சனை செய்பவர்களை கண்காணித்து நன் நடத்தை சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது, மேலும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கு 327 பேருக்கு தகவல் தெரிவிக்கபப்ட்டு அவர்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடைபெற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளை காவல் துறை சார்பாக பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post 1437 வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஆவடி காவல் ஆணையரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.