காரிமங்கலம், ஜூலை 9: காரிமங்கலம் சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 500 ஆடுகள் மற்றும் 350 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரூ.40 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.32 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. ரூ.3 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ரூ.75 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.
