- முகதீர்
- திருவரூர்
- திருவாரூர்
- கலெக்டர்
- அலுவலகம்
- தினம்
- திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டமைப்பு
- மோகனச்சந்திரன்
- முகதீர்
- தின மலர்
திருவாரூர், ஜுலை 8: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 249 மனுக்களை அளித்தனர்.
பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பல்லவி வர்மா, சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் தையல்நாயகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவாரூரில் குறைதீர் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.
