சென்னை: பாஸ்போர்ட் வழக்கில் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கணவரை பிரிந்த பெண் விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார். பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தில் கணவரின் கையெழுத்து கேட்பதால் ஐகோர்ட்டை பெண் நாடியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஒரு பெண் பாஸ்போர்ட் பெற விரும்பினால் கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுவதாக நீதிபதி விமர்சித்தார்.
இதனால், மனைவி தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது படிவம் ஜே-வில் கணவர் கையெழுத்து பெற அவசியமில்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கோரி மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
The post பாஸ்போர்ட் வழக்கு: ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு செய்ய ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.
