- தீபிகா
- மும்பை
- தீபிகா படுகோன்
- பேந்திரா கடற்கரை, மும்பை
- ரன்வீர் சிங்
- அலிபாக், மகாராஷ்டிரா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: மும்பை பாந்த்ரா கடற்கரை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை ₹119 கோடிக்கு தீபிகா படுகோன் வாங்கியுள்ளார். தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நட்சத்திர தம்பதிக்கு மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் பங்களா உள்ளது. இந்நிலையில் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குத்தகைக்கு அவர்கள் தங்கியிருந்தார். இப்போது பாந்த்ரா பகுதியில் கடற்கரைக்கு அருகிலேயே பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் 16வது தளம் முதல் 19வது தளம் வரை 4 தளங்களில் உள்ள 4 வீடுகளை தீபிகா படுகோன், ரன்வீர் சிங் சேர்ந்து வாங்கியுள்ளனர். இதன் விலை ₹119 கோடியாகும்.
இந்த வீட்டின் உள்அலங்கார வேலைகளை தீபிகா படுகோன் முன்நின்று கவனித்து வருகிறார். இதற்காக படப்பிடிப்புக்கு அவர் லீவு போட்டிருக்கிறாராம். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த புதிய வீடு, ஷாருக்கானின் வீட்டிற்கு அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோன் பாலிவுட்டில் வெளியாகி ₹1000 கோடி வசூலித்த ‘பதான்’ திரைப்படத்தில் நடிகர் ஷாருக்குடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸுடன் இணைந்து ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திலும் ஹிரித்திருக்குடன் இணைந்து ‘ஃபைட்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
The post ₹119 கோடிக்கு 4 வீடுகளை வாங்கினார் தீபிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.