×

வடமாநில வாலிபர் வெட்டி கொலை: 4 பேருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த நல்லூர் புதுநகர் பகுதியில் வடமாநில வாலிபர் இரு தினங்களுக்கு முன் இரவு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த 4 இளைஞர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தலை மற்றும் உடம்பு பகுதியில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் கீழே விழுந்தார். இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். 4 வாலிபர்களும் தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த வாலிபரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தான்.  இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நபர் யார்?, கொலையாளிகள் யார்? என்ன காரணம் குறித்து சோமங்கலம் போலிசார் விசாரித்து வருகின்றனர்….

The post வடமாநில வாலிபர் வெட்டி கொலை: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : North State ,Walliper ,Sripurudur ,Nallur Pudunagar ,Somangalam ,Thambaram ,North State Valibur ,Pollyber ,
× RELATED கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7...