×

2வது மனைவி மூலம் அப்பா ஆனார் பிரபுதேவா

சென்னை: கடந்த 1995ல் ரமலத் என்ற நடனக்கலைஞரை காதலித்து, தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபுதேவா, பிறகு 3 மகன்களுக்கு அப்பா ஆனார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா, தனது இயக்கத்தில் நடித்த நயன்தாராவை காதலித்தார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு நயன்தாரா மாறினார் என்றாலும், திடீரென்று அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதற்கிடையே, பிரபுதேவாவின் மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் மும்பையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து மணந்தார். தம்பதி சென்னை ஈசிஆர் ரோட்டிலுள்ள வீட்டில் குடியேறினர். கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவாவின் பிறந்தநாளையொட்டி அவரும், ஹிமானி சிங்கும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் பிரபுதேவா, தனது 2வது மனைவி ஹிமானி சிங் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post 2வது மனைவி மூலம் அப்பா ஆனார் பிரபுதேவா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhudeva ,Chennai ,Prabhu Deva ,Ramalath ,Ramalam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’...