×

விவாகரத்தாகி சிங்கிளாக இருக்கும் ஹிரித்திக் ரோஷனின் கையை பிடித்து சென்ற இளம்பெண் யார்?.. ஒருவழியாக கண்டுபிடித்தது பாலிவுட்

மும்பை: விவாகரத்தாகி சிங்கிளாக இருக்கும் ஹிரித்திக் ரோஷன், இளம்பெண் ஒருவரின் கையை பிடித்துக் கொண்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் – சூசன் கான் தம்பதியருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மும்பையில் இருக்கும் உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வந்த ஹிரித்திக் ரோஷன், ஒரு பெண்ணின் கையை பிடித்தபடி காரில் ஏறிச் சென்றார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஹிரித்திக்குடன் சென்ற பெண் யார் என்ற கேள்வி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவித்த நிலையில், ஹிரித்திக்குடன் சென்றது வளர்ந்து வரும் நடிகையும், இசையமைப்பாளருமான சபா ஆசாத் (32) என்பதும், ‘தில் கபடி’ படம் மூலம் 2008ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர் என்பது தெரியவந்தது.  அவர் இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறார். இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், ‘ஹிரித்திக் ரோஷன் கடந்த சில காலமாகவே சபா ஆசாத்தை காதலித்து வருகிறார். வெளியுலகத்திற்கு தெரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டனர். தற்போது அவர் தனது காதலியை அறிமுகம் செய்து வைக்க தயாராகி விட்டார். ஹிரித்திக்கும் சபாவும் டேட்டிங் போகிறார்களா? அல்லது அவர்கள் தங்களது வருங்கால திட்டம் குறித்து விவாதிக்க ஓட்டலுக்கு வந்தனரா என்பது தெரியவில்லை’ என்றன. விவாகரத்தாகி பல ஆண்டுகளாக ஹிரித்திக் சிங்கிளாகவே இருக்கிறாரே என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்ட நிலையில், தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, ஹிரித்திக்கை பிரிந்த சூசன் கான், நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருகிறார் என்று பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன….

The post விவாகரத்தாகி சிங்கிளாக இருக்கும் ஹிரித்திக் ரோஷனின் கையை பிடித்து சென்ற இளம்பெண் யார்?.. ஒருவழியாக கண்டுபிடித்தது பாலிவுட் appeared first on Dinakaran.

Tags : Hrithik Roshan ,Bollywood ,Mumbai ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...