×

பெண் எஸ்ஐ பலாத்கார வழக்கு; பாஜக மாஜி தலைவர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு: 2 போலீஸ் ஏடிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த பெண் எஸ்ஐ பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் போலீஸ் எஸ்ஐ ஒருவர், சமீபத்தில் பில்வாரா  மாவட்டம் பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார்  ஒன்றை அளித்திருந்தார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில்,  ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் தலைவர் பன்வர் சிங் பலாரா உள்ளிட்ட 12  பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் எஸ்ஐ, பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ேபாது, அவரை ​அப்போதைய கூடுதல் எஸ்பி சஞ்சய் குப்தா, அப்பகுதி பாஜக முன்னாள் தலைவர் பன்வர் சிங் பலாராவை சந்திக்கும்படி கூறினார். அவரை சந்திக்க மறுத்தால், இடமாற்றம் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். அதையடுத்து பாஜக தலைவரை, அந்த பெண் எஸ்ஐ சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண் எஸ்ஐயை, பாஜக முன்னாள் தலைவர் பன்வர் சிங் பலாரா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்ஐ அளித்த புகாரின் அடிப்படையில்,  பன்வர் சிங் பலாரா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் போலீஸ் ஏடிஎஸ்பிக்கள் சஞ்சய் குப்தா, கஜேந்திர சிங் ஜோதா ஆகியோரும் அடங்குவர். அவர்கள், சம்பந்தப்பட்ட ெபண் எஸ்ஐயிடம் முறைகேடாக நடந்து ெகாண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, மாநில இணைச் செயலாளர் (உள்துறை) ராஜேந்திர சிங் தன்வார் பிறப்பித்துள்ளார்’ என்றனர்….

The post பெண் எஸ்ஐ பலாத்கார வழக்கு; பாஜக மாஜி தலைவர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு: 2 போலீஸ் ஏடிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Maji ,Jaipur ,Rajasthan ,SI Palatkara ,Pal ,Bajha Maji ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...