×

உள்ளாடை குறித்த சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்டார் நடிகை

மும்பை: உள்ளாடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை சுவேதா திவாரி மன்னிப்பு கேட்டுள்ளார். பாலிவுட் நடிகை சுவேதா திவாரி, வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி போபாலில் நடந்தது. அப்போது அந்த வெப்சீரிசில் தனது கேரக்டர் பற்றி சுவேதா திவாரி பேசிக்கொண்டு இருந்தபோது, பெண்களின் உள்ளாடை மற்றும் கடவுளை ஒப்பிட்டு சரச்சைக்குரிய வகையில் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சுவேதா திவாரி மீது சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ‘24 மணி நேரத்தில் சுவேதா திவாரி பேசியது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து சுவேதா திவாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இதுகுறித்து சுவேதா திவாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது கருத்து யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசப்படவில்லை. எனது கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள என்னைப் போன்ற ஒருத்தி இதுபோன்ற கருத்துகளை வேண்டும் என்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. மேலும், எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. எனது செயல்பாடுகளோ, வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதுகுறித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடிகை சுவேதா திவாரி கூறியுள்ளார்….

The post உள்ளாடை குறித்த சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்டார் நடிகை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Suveda Tiwari ,Bollywood ,Suveta Tiwari ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...