×

காஷ்மீரில் 2 இடங்களில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 12 மணி நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜெய்ஷ் இ முகமது தளபதி உள்பட 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். புத்கம் மற்றும் புல்வாமாவின் நயிரா பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த இடங்களை பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்றிரவு அவர்களை சுற்றி வளைத்த போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தளபதியான உள்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர். 12 மணி நேரத்தில் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு இருப்பது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post காஷ்மீரில் 2 இடங்களில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 12 மணி நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Jaish e Mohammed ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...