தூத்துக்குடி, மே 23: தூத்துக்குடியில் பைக் மோதிய விபத்தில் மாஜி கப்பல் மாலுமி பலியானார். தூத்துக்குடி எஸ்பிஜி கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் (70). இவர், கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி விஇ ரோடு அந்தோனியார் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post தூத்துக்குடியில் பைக் மோதி மாஜி கப்பல் மாலுமி பலி appeared first on Dinakaran.
