×

சிஎம்டிஏ சார்பில் ரூ.255.60 கோடி மதிப்பீட்டிலான 20 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.255.60 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனுர், வரதராஜபுரம், திருநாகேஸ்வரத்தில் ரூ.11.46 கோடி செலவில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் மற்றும் ரூ.3.20 கோடி செலவில் தியாகராய நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் உள்பட ரூ.14 கோடியே 66 லட்சம் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.255.60 கோடியில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திறந்து வைக்கப்பட்ட திட்டப் பணிகளின் விவரம்:
* சென்னை வெளிவட்ட சாலையிலுள்ள மீஞ்சூர், வெள்ளனூர், வரதராஜபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 11 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள், சிறார் விளையாட்டுப் பகுதிகள், யோகா தளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பசுமையான புல்வெளிகள், நடைபாதை, உயர் மின்விளக்குகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி பூங்காக்கள்.

* சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கிரிக்கெட் ஆடுகளம், கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் மேஜைப்பந்து விளையாட்டு ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் என மொத்தம் ரூ.14 கோடியே 66 லட்சம் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரம்:
* அய்யப்பன்தாங்கல் மாநகர பேருந்து நிலையத்தை ரூ.18 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டிலும், திருவான்மியூர் மாநகர பேருந்து நிலையத்தை ரூ.28 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும், ஆவடி மாநகர பேருந்து நிலையத்தை ரூ.36 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலும், பாடியநல்லூர் மாநகர பேருந்து நிலையத்தை ரூ.10 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலும், வள்ளலார் நகர் மாநகர பேருந்து நிலையத்தை ரூ.9 கோடியே 99 லட்சத்திலும் மேம்படுத்தும் பணிகள்.

* அண்ணா நகரில் உள்ள நூலகத்தை ரூ.15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பகிர்ந்து பணியாற்றும் இடத்துடன் கூடியதாக மேம்படுத்தும் பணி, காந்தி நகரில் உள்ள நூலகத்தை ரூ.24 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் பகிர்ந்து பணியாற்றும் இடத்துடன் கூடியதாக மேம்படுத்தும் பணி, எழும்பூர் ஹாரிங்டன் சாலையில் ரூ.13 கோடியே 72 லட்சத்தில் சமுதாயக்கூடம், மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில் ரூ.8 கோடியே 25 லட்சத்தில் பன்னோக்கு மையம்.

* கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.3 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணி என மொத்தம் ரூ.255 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சிஎம்டிஏ சார்பில் ரூ.255.60 கோடி மதிப்பீட்டிலான 20 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : CMDA ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Chennai Metropolitan Development Authority ,Chennai Secretariat ,Chennai Outer Ring Road ,Dinakaran ,
× RELATED கைக்குழந்தையால் படிப்பை பாதியில்...