திருச்செந்தூர், மே 17: அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதேபோல் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே நேற்று காலை சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருப்பினும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம்போல கடலில் நீராடினர்.
The post திருச்செந்தூர் கோயில் அருகே 60 அடிக்கு உள்வாங்கிய கடல் appeared first on Dinakaran.