×

5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல், மே 17: நாமக்கல் மாவட்டத்தில், அடுத்து வரும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17ம்தேதி) 38 டிகிரி செண்டிகிரேட் வரை பகல்நேர வெப்பம் இருக்கும். 18ம்தேதி முதல், 21ம்தேதி வரை, 35 முதல் 37 டிகிரி வரை வெப்பம் இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்ப நிலை, 24 டிகிரி முதல் 27 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். இன்று 17ம்தேதி 36 மி.மீ., 18ம்தேதி 1 மி.மீ., 19ம்தேதி 10 மி.மீ., 20ம்தேதி 4 மி.மீ., 21ம் தேதி 4 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பலும் வெப்ப அயற்சியால் இறந்துள்ளன. எனவே, பண்ணைகளில் கோடை கால பராமரிப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். வெப்ப அயற்சியின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். தீவனத்தில் விட்டமின் சி மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை கலந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Meteorological Department ,Namakkal district ,Namakkal Veterinary College Meteorological Department ,Dinakaran ,
× RELATED சாலையில் முறிந்து விழுந்த மரம்