×

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து

சென்னை: திருப்பதி தேவஸ்தான் கலப்பட நெய் சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமம் சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய உத்தரவை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நெய் மட்டுமின்றி பால் பொருள் உற்பத்திக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததால் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட் கிளையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயணன் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

The post திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Tags : Dindigul A. R. ,Chennai ,Dindigul A. ,Tirupathi ,Devastan Kalanthawai Ghee R. ,Food Safety Standards Commission ,Aycourt Madurai ,Dinakaran ,
× RELATED 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு,...