×

தொழில் முனைவோருக்கு 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் முனைவோருக்கு வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான பயிற்சி தொடர்பான பயிற்சியானது வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண், திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண், பெண்,திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய, பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி, செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032, 9360221280, 9543773337 முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தொழில் முனைவோருக்கு 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...