ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள், இத்தாலியின் ரோம் நகரில் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவில் நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் உலகின் 5ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ், சக அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்ஸ் (42வது நிலை) உடன் மோதினார். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய கீஸ், 2வது செட்டை மோசமாக ஆடி இழந்தார். அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் அந்த செட்டை பேடன் வசப்படுத்தினார். அதனால், 2-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் பேடன் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் பிரிவில் அசத்திய ஸ்வெரெவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் 2ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அர்ஜென்டினா வீரர் கேமிலோ யுகோ கேரபெலி மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய ஸ்வெரெவ், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
* ஜகா வாங்கிய இகா காலின்சிடம் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலி ஓபன் டென்னிஸில் மற்றொரு போட்டியில், போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், அமெரிக்க வீராங்கனை டேனியல் ரோஸ் காலின்சிடம், 1-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அதனால், காலின்ஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ் ஆடிப்போன மேடிசன்: 42ம் நிலை வீராங்கனையிடம் தோல்வி appeared first on Dinakaran.
